வருசநாடு: வருசநாடு அருகே நிலத்தை ஜப்தி செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் மிரட்டியதால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.தேனி மாவட்டம், வருசநாடு அருகே குமணந்தொழு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி (56). விவசாயி. இவர் கடந்த 2017ல் தேனியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் 3 ஏக்கர் நில பத்திரத்தை அடமானமாக வைத்து, ரூ.5 லட்சம் விவசாயக்கடன் பெற்றார். விவசாயம் பொய்த்ததால் தவணை தொகையை முறையாக செலுத்த முடியவில்லை.இதனிடையே கடன் தொகை முழுவதையும் வட்டியோடு சேர்த்து உடனடியாக கட்ட வேண்டும் என, வங்கி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டின் கதவில் நோட்டீஸ் ஒட்டினர்.