தஞ்சை: இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவருடன் சேர்த்து வைக்ககோரி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளுடன் முதல் மனைவி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காடுவெட்டி விடுதி பள்ளத்தான் மனை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகள் பாண்டிசெல்வி (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லெனின் என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் லெனின் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாண்டிச்செல்வி தனது மகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார். அதே வீட்டில் லெனினின் தங்கை நளினி, இவரது கணவர் கண்ணன் மற்றும் மாமியார் வசித்து வந்தனர். இதற்கிடையே ஒருநாள் நளினியின் கணவர் கண்ணன், பாண்டிசெல்வியின் தங்கையிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இதனால் பாண்டிசெல்விக்கும், லெனினின் குடும்பத்தினருக்கும், இடையே தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, பாண்டிசெல்வி மற்றும் மகளை பாண்டி செல்வியின் தாய் வீட்டில் விட்டு விட்டனர்.