கடலூர்: நெய்வேலி அருகே இளம்பெண் தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டபோது மர்மநபர்கள் கல் வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலியை அடுத்த குறவன்குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவரது மகளுக்கு அதே ஊரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு செய்தி அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அறிந்த இளம்பெண்ணின் காதலரும் உயிரை மாய்த்து கொண்டார். காதலர்கள் தற்கொலைக்கு காரணமாக இருந்த பிரேம்குமாரை கைது செய்ய கோரி உறவினர்கள் கடலூர் விருத்தாச்சலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.