வருசநாடு: கண்டமனூர் கிராமத்தில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் பரமசிவன் கோயில் கண்மாய் நிரம்ப துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கண்டமனூர் கிராமத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது இதனால் அப்பகுதியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு கண்டமனூர் பரமசிவன் கோயில் கண்மாயில் நீர் தேங்க தொடங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் அதிகளவில் சாரல் மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.