நெல்லை: தென்காசியில் பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் தென்காசி இணை பதிவாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென்காசியை சேர்ந்தவர் காந்திசெல்வன். இவர் தனது சொத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டி கடந்த 20.8.07ம் தேதி தென்காசி பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த இணைப்பதிவாளர் சந்தன மாரிமுத்துவை (56) சந்தித்து தனது சொத்தை பத்திர பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு சந்தனமாரிமுத்து 25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். காந்திசெல்வன் 7 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். ஆனாலும் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.