சென்னை: தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை என்று தமிழக அரசு அரசாணையில் கூறியுள்ளது. பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களிலும் கடைகள் இயங்க அரசாணை மூலம் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையிட்டுள்ளது. ஊழியருக்கு நாளுக்கு 8 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி மட்டுமே பணி செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதல் நேரம் தேவையெனில் 10.30 மணி நேரத்திற்கு மேல் பணி வழங்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் 365 நாட்களும் திருந்திருக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.