புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ராணுவே வந்ததாலும் தடுத்து நிறுத்துவோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசத்துடன் கூறினார். விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் நடந்தது. இதில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசு எந்தவொரு திட்டத்தை அறிவித்தாலும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது. புதுச்சேரியில் ைஹட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நினைத்தால் நாங்கள் போராடி எதிர்ப்போம். புதுச்சேரியில் ராணுவத்தை நிறுத்தினாலும் நாங்கள் அஞ்சமாட்டோம்.