சென்னை: புதிய வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மகனை உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (61). விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர்களுக்கு 3 மகன்கள். முதல் மகன் ஹரிதாஸ் (35) என்பவருக்கு திருமணமாகிவிட்டது. சோழவரம் அருகே இருளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், பிரதம மந்திரியின் ஆவாஷ் யோஜனா திட்டத்தில் இவர்களுக்கு பெரவள்ளூர் பகுதியில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக தந்தைக்கும், மகனுக்கும் பிரச்னை இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஹரிதாசுக்கும், ரவிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரவி, ‘‘மகனை பார்த்து நீ தனிக்குடித்தனம் சென்றுவிடு’’ என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.