பெற்றோர் கண்முன் பரிதாபம் பைக் கவிழ்ந்து குழந்தை பலி

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கண்ணன் (27). சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவரது மனைவி சித்ரா (24). இவர்களின் 8 மாத பெண் குழந்தை நட்சத்திரா. நேற்று முன்தினம் கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கொடுங்கையூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். கள்ளிக்குப்பம் சாய்பாபா கோயில் அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. இதில் பைக்குடன் மூவரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் கண்ணன், சித்ராவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. குழந்தை நட்சத்திராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே குழந்தை நட்சத்திரா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். புகாரின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: