ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட 187வது வார்டு மடிப்பாக்கம் அய்யப்பன் நகர் ஏரிக்கரையில் தினந்தோறும் காலை, மாலையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செல்கின்றனர். இதன் காரணமாக, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நிதியுதவியுடன் ஏரிக்கரையில் கான்கிரீட் நடைபாதை, தடுப்பு வேலி, இருக்கைகள், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் இங்கு நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்த நடைபாதை அருகே மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் இவற்றில் குப்பையை கொட்டுகின்றனர்.