புதுடெல்லி: ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஏர் இந்தியாவில் நடந்த முறைகேடு பற்றிய விசாரணைக்கு வரும் 6ம் தேதி ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பிரபுல் குமார். இவரது பதவிக் காலத்தில் ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கான காரணங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆராய்ந்தது. அதில், லாபகரமான சர்வதேச வழித்தடங்கள் மற்றும் பயண நேரத்தை, கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஏர் அரேபியா போன்ற வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விட்டுக் கொடுத்ததுதான் காரணம் என கண்டறியப்பட்டது.