சென்னை: 126 சிறிய லாரிகள் மூலம் குறுகிய சாலையில் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். குடிநீர் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சிந்தாதிரிபேட்டையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். தண்ணீர் விநியோகம், இருப்பு, பற்றாக்குறை, உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பருவமழை குறைவாக பெய்ததால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர் முற்றிலுமாக இறங்கிவிட்டது என தெரிவித்தார்.