காரைக்குடி : காரைக்குடியில் 36 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பாதாளச் சாக்கடைக்காக வெட்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் கிடக்கின்றன. இதனால் இரவில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும், தடுமாறி அந்த பள்ளத்திற்குள் விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பாக காரைக்குடி கழனிவாசல் புதுரோடு பகுதியில் இரவு நேரத்தில் சென்ற முதியவர் குழிக்குள் விழுந்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அதேபோல் இரவு ரயில்வே பீடர் ரோடு பகுதியில் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பாதாளச்சாக்கடை குழிக்குள் விழுந்து பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.