ஜார்கண்டில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்: 15 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

ராஞ்சி: ஜார்கண்டில் நக்சல்கள் குண்டு வீசி நடத்திய தாக்குதல்களில் 15 வீரர்கள் காயமடைந்தனர். ஜார்கண்டில் சேரைகேலா கார்சவான் மாவட்டத்தில் நேற்று காலை சிஆர்பிஎப் வீரர்கள், கோப்ரா படையினர் மற்றும் மாநில போலீசார் இணைந்து நக்சல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். குச்சாய் காட்டுப் பகுதியில் வீரர்கள் ரோந்து சென்றபோது  நக்சல் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியது. அதிகாலை 5 மணிக்கு நடந்த இந்த குண்டு வெடிப்பில் 15 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது. இது குறித்து ஐஜி ஆஷிஷ் பாத்ரா கூறுகையில், “ நக்சல்கள்  வைத்த குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது,” என்றார்.

Related Stories: