அகமதாபாத்: ‘‘அடுத்த 5 ஆண்டுகளில், உலக நாடுகளின் பட்டியலில், இந்தியா தனக்குரிய இடத்தை பிடிக்கும்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் வெற்றி விழா நிகழ்ச்சி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள கமதாபாத்தில் நேற்று நடத்தப்பட்டது. குஜராத் பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் நடந்த தீ விபத்தில் 22 மாணவர்கள் பலியானதால், இந்த விழா நேற்று ஆரவாரம் இல்லாமல் எளிமையாக நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கூறியதாவது:நேற்று வரை, இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்ற இரண்டு விதமான மனநிலையில் இருந்தேன். ஒருபுறம் மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எனது தாயிடம் ஆசி பெற வேண்டும். இது என் கடமை.