தேனி தொகுதியில் அதிமுகவின் வெற்றி ஆய்வுக்குரிய விஷயம்

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நேற்று தரமணியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், மாவட்ட தலைவர் பாக்கியம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் பாஜவுக்கு மக்கள் வெற்றியை தீர்ப்பதாக அளித்திருப்பது  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருப்பது ஆய்வுக்குரிய விஷயம் ஆகும். அங்கு பணம் சரளமாக விநியோகிக்கப் பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது மேலும் வாக்கு எண்ணிக்கையில் கூட வாக்கு முரண்பாடுகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது அதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.

Related Stories: