சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடந்த முதல் தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக செயல் தலைவராக பதவி வகித்த மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். அதன் பிறகு திமுகவில் பல்வேறு சீர்திருத்தங்கள் ஏற்பட்டன.பொதுமக்களை சந்திப்பதற்காக மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கிராமங்களில் மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டார். பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். இதன் அடுத்தகட்டமாக, கிராம சபை கூட்டங்களை நடத்தினார். மாவட்ட செயலாளர்கள், மாநில பிரதிநிதிகள், பகுதி பிரதிநிதிகளை கிராம சபை கூட்டங்களை கூட்டச்செய்து மக்களின் பிரச்னைகளை தெரிந்துகொண்டார்.