கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள மனவளர்ச்சி குன்றியோர் தனியார் காப்பகத்தில் இருப்பவர்களை, அதன் உரிமையாளர் ஈவு இரக்கமின்றி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்யும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ. காலனியில் அன்பின் சிகரம் என்ற பெயரில் இயங்கி வரும் மனநலம் குன்றியோர் காப்பகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களை சேர்ந்த, ஆதரவற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் தங்கியுள்ளனர்.