சென்னை: காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 8,826 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஜூலை 14ல் நடக்கிறது. காவல்துறையில் 2ம் நிலை காவலர் (பெண்கள், திருநங்கைள்) 2,465, இரண்டாம் நிலை காவலர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை (ஆண்கள்) 5,962, சிறைத்துறை இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண்) 186, (பெண்கள்) 22, தீயணைப்பாளர் ஆண்கள் 191 என மொத்தம் 8,826 காலி பணியிடங்கள் உள்ளன.