நாளை வாக்கு எண்ணிக்கையையொட்டி நாடுமுழுவதும் பாதுகாப்பு தீவிரம்: தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீஸ்

சென்னை: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி நாடுமுழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலீசார், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளனர்.

* தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மைய வெளி வளாக்கில் தமிழ்நாடு பாதுகாப்பு சிறப்பு படை போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

* உள் வளாகத்தில் காவல் அலுவல்கள், வாக்கு எண்ணும் அறைக்கு உள்ளே ஆயும் ஏந்திய துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

* தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

குறிப்பாக சென்னையில் மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அரசு மதுாபன கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: