வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு

சென்னை : சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு செய்தார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வடசென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு என்ணிக்கை நாளை ராணி மேரி கல்லூரியில் நடைபெறுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள 3 மையங்களில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Related Stories: