செய்யாறு: செய்யாறு அருகே பட்டுப்போன மரத்தை அகற்றும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரசங்குப்பம் கிராமத்தில் செய்யனூர்-வெங்களத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. கோயிலுக்கு செய்யாறு, வெம்பாக்கம் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.இக்கோயில் அருகேவுள்ள பஸ் நிறுத்தத்தில் பட்டுப்போன அரச மரம் கடந்த 3 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளது. பலமான காற்று வீசும்போது இந்த மரத்திலிருந்து கிளைகள் முறிந்து விழுகின்றன. இதனை அகற்ற ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்தார்களாம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லையாம்.