ஆலந்தூர்: மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் கெங்குராஜிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, மடிப்பாக்கம் காந்திநகர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் (37) என்பவர், தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பது தெரிந்தது.