ராஜிவ் நினைவுநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம்

சென்னை: தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வரும் 21.5.2019 அன்று தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அமைதி ஊர்வலம் நடத்தும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வடசென்னை, தென்சென்னை, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சென்னையில் நடைபெறும் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் நானும்,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்கிறோம். மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நட த்தும் நிகழ்ச்சிகளில், சிறப்பு பிரதிநிதிகளான திருச்சி - ப. சிதம்பரம், மதுரை - கே.ஆர்.ராமசாமி, வேலூர் மத்தி - கே.வி.தங்கபாலு, தேனி - ஈ.விகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.

Related Stories: