பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 537 புள்ளிகள், நிஃப்டி 150 புள்ளிகள் உயர்வு

மும்பை: பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 537.29 புள்ளிகள் உயர்ந்து 37,930.77 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 150.05 புள்ளிகள் உயர்ந்து 11,407.15 புள்ளிகளில் நிறைவடைந்தது.

பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, கோட்டாக் மகேந்திரா, ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தது. இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், வேதாந்தா, எஸ் பேங்க், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்தது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகிய காரணங்களால் பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: