சென்னை, மே 16: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைமை ஆணையராக இருந்த ஷீலா பிரியா அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் எஸ்.சுவர்ணா நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஷீலா பிரியா நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த 4ம் தேதியோடு 65 வயதை நிறைவு செய்ததால், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.