சென்னை : தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்விற்காக அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூன் 8, 9ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல் நாளும், ஜீன் 9ம் தேதி இரண்டாம் தாளும் காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே www.trb.tn.nic.in என்ற தளத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைதளம் சரிவர இயங்காததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.