கொழும்பு: இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் ஒருவர் பலியாகி உள்ளார். இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதன் தாக்குதலுக்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து இலங்கையில் அங்கங்கே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கையில் படிப்படியாக பதற்றம் தணிந்து வந்த நிலையில், இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள குலியபிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா, டும்மாளசூரியா ஆகிய இடங்களில் முஸ்லீம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.