ஊட்டி: ஊட்டி ரேஸ் கோர்சில் நேற்று நடந்த ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்ேடக்ஸ்’ குதிரை பந்தய போட்டியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டியில் ஆண்டு தோறும் கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் துவங்கி துவங்கி ஜுன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டி ரேஸ் கோர்சில் குதிரை பந்தயங்கள் நடத்துவது வழக்கம். இந்தாண்டுக்கான குதிரை பந்தயம் கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதற்காக பெங்களூர், சென்னை, பூனா உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் ஊட்டி குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளன. நாள்தோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்து வருகிறது.