பள்ளி பஸ், வேன்களில் அவசரகால வழி இல்லாததால் 6 வாகனங்களின் தகுதி சான்று ரத்து: ஆர்டிஓ நடவடிக்கை

சென்னை : பள்ளி வாகனங்களில் அவசரகால வழி, முதலுதவி பெட்டி உள்பட பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத 6 பள்ளி வாகனங்களுக்கான தகுதி சான்று ரத்து செய்து மீனம்பாக்கம் ஆர்டிஓ நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆலந்தூரில் உள்ள மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட, பரங்கிமலை ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், கீழ்கட்டளை, கொளப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள 12க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இயங்கி வருகிறது. 135 பேருந்து மற்றும் வேன் போன்றவைகள் ஆய்வு செய்வதற்காக ஆலந்தூரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

அப்போது தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் போலீஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி அவசரகால வழி, தீயணைப்பான், கருவி உள்ளிட்ட 17 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்று சோதனை நடந்தது. அப்போது உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத 6 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.

Related Stories: