எதிரெதிரே வந்த ரயில்கள் மதுரை ரயில்வே அதிகாரி திருச்சிக்கு அதிரடி மாற்றம்

மதுரை: மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலும், செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயிலும், கடந்த 9ம் தேதி மாலை 6 மணியளவில், திருமங்கலத்திற்கும், கள்ளிக்குடிக்கும் இடையே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்தன.  இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது.

தெற்கு ரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி மேத்தா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதன் அடிப்படையில் கள்ளிக்குடி ரயில் நிலைய அதிகாரி தீப்சிங் மீனா, திருமங்கலம் நிலைய அதிகாரி ஜெயக்குமார், சிக்னல் கட்டுப்பாட்டு அலுவலர் முருகானந்தம் ஆகியோர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரை கோட்ட இயக்க மேலாளர் பிரேம்குமார் நேற்றுமுன்தினம் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பிறப்பித்துள்ளார்.

Related Stories: