சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இன்று காலை 7 மணி அளவில் பெட்ரோல் பங்க் வளாகத்திலேயே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.