உடன்குடி: திருச்செந்தூர் அருகே தண்ணீரின்றி நெற்பயிர் கருகியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அடுத்த மெஞ்ஞானபுரம் அருகே பிள்ளைவிளையை சேர்ந்தவர் பாக்கியராஜ் (68). விவசாயியான இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் வாழை, பருத்தி, நெல் சாகுபடி செய்து வந்தார். சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதேபோல் இந்தாண்டும் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் தவித்த பாக்கியராஜிடம், விவசாயத்திற்காக கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.