பெண் காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா

பெரம்பூர்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். தனது கணவருடன்  சென்னையில் தனியாக வசிக்கும் மகாலட்சுமி, தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.உறவினர்கள் வெளி மாவட்டத்தில் உள்ளதால், அவருக்கு வளைகாப்பு செய்ய முடியாமல் போனது. இதனால், மன வேதனையில் இருந்துள்ளார். இதனை அறிந்த சக காவலர்கள்,  மகாலட்சுமிக்கு காவல் நிலையத்திலேயே  வளைகாப்பு செய்ய ஏற்பாடுகள் செய்தனர். அதன்பேரில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கோமளவல்லி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மோகன்  தலைமையில் காவலர்கள் நேற்று முன்தினம், காவல் நிலையத்தில் சீமந்த  விழாவை கொண்டாடினர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: