திஸ்பூர்: அசாமின் ஹைலகண்டி நகரில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதில் ஏராளமான வாகனங்கள், கடைகள் சேதமாகின. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலில் 15 பேர் படுகாயமடைந்தனர்.