லண்டன்: பணமோசடி வழக்கில் இங்கிலாந்து சிறையில் உள்ள நீரவ் மோடி, தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, லண்டனுக்கு நீரவ் மோடி தப்பிச் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடும்படி லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனிடையே நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர்.