திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் மற்றும் காற்றாலை அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கேரள மாநிலம் செங்கணூரைச் சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். பல மாத சிறை தண்டனைக்கு பின்னர் தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் கொச்சி அருகே காரில் சென்றுக் கொண்டிருந்தார். சக்கரபரம்பு பகுதியில் சென்றபோது பைக்களில் வந்த ஒரு கும்பல் இவரது காரை வழிமறித்து சேதப்படுத்தி அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் பாலாரிவட்டம் போலீசில் புகார் செய்தார்.