மறுமதிப்பீடு திட்டத்தில் இதுவரை இருந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர திட்டம்: அண்ணா பல்கலை. பதிவாளர் குமார்

சென்னை: மறுமதிப்பீடு திட்டத்தில் இதுவரை இருந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலை. பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவரும், விடைத்தாள் திருத்திய ஆசிரியரும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் விவாதித்து புதிய மதிப்பெண் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்த முடிவெடுத்துள்ளதாக கூறினார். இந்நிலையில் 8-வது செமஸ்டரில் மாணவர்கள் எழுதும் 2 தேர்வுகளில், ஒரு தேர்வில் தோல்வியடைந்தால், ஒரே மாதத்தில் உடனடி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: