பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை ஊழியர் கொலையில் அதிகாரிகளுக்கு தொடர்பா?: இறந்தவர் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகைகள் கொள்ளையடித்ததாக, கொலை செய்யப்பட்ட ஊழியர் மாரிமுத்து மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.  கொலையிலும், கொள்ளையிலும் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு  உள்ளதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த மாதம் 29ம் தேதி ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்டது. இந்த தங்க நகைகளை அந்த வங்கியின் அலுவலக  உதவியாளரான புதுக்கோட்டை திருகட்டளையை சேர்ந்த மாரிமுத்து  எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த 3ம்தேதி மாரிமுத்துவை சடலமாக போலீசார்  மீட்டனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வங்கி நிர்வாகம் 13.75 கிலோ தங்க நகைகளை காணவில்லை என்றும் இதனை மாரிமுத்து திருடியிருக்கலாம் என்றும் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் மாரிமுத்து மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர். மாரிமுத்துவை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தால்தான் இதில் வங்கி அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு பற்றிய விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: