சென்னை: நீதிமன்றம் நியமித்த வக்கீல் கமிஷனர்களை தொழிற்சங்கத்தினர் மிரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அருகே உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து கொடுக்க வாஷின் ஆட்டோமோடிவ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த வாஷின் நிறுவனம் சாவல் என்ற நிறுவனத்திற்கு துணை கான்ட்ராக்ட் கொடுத்தது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வாஷின் ஆட்டோமோடிவ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட சாவல் நிறுவனத்திற்கு சென்று விசாரித்து வருவதற்காக வக்கீல்கள் சீனிவாசன், ஆறுமுகம் ஆகியோரை வக்கீல் கமிஷனர்களாக நியமித்து கடந்த ஏப்ரல் 15ம் தேதி உத்தரவிட்டார்.