ஐதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநில மின்துறை இணையதளங்களை முடக்கியுள்ள ஹேக்கர்கள், அதை விடுவிப்பதற்கு 20 லட்சம் கேட்டு மிரட்டலும் விடுத்துள்ளனர். தெலங்கானா மின் விநியோக நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் மாலை மர்ம நபரிடம் இருந்து இ மெயில் ஒன்று வந்தது. அதை மின் நிறுவன பணியாளர் ஒருவர் கிளிக் செய்ததும் அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல், தெலங்கானா மாநில மின்துறை இணையதளமும் முடக்கப்பட்டது. இதனால், முக்கிய தகவல்களை பரிமாற முடியாமல் இருமாநில அரசுகள் தவிக்கின்றன. இந்நிலையில், 20 லட்சத்தை பிட்காயினாக தந்தால் முடக்கப்பட்ட இணையதள பக்கங்களை மீட்டுத் தருவதாக அந்த ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக தெலங்கானா மாநில மின் விநியோகத் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தெலங்கானா சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் ஆணையாளர் (சைபர் குற்றங்கள்) ரகு கூறுகையில், ‘‘வழக்கமாக இணையதள பக்கத்தை முடக்கும் ஹேக்கர்கள், பணயத்தொகையை செலுத்துவதற்கான இணைப்பு ஒன்றை கொடுப்பார்கள்.