ராஜஸ்தானில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 13 தொகுதிகளுக்கு கடந்த 29ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 12 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், இம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இந்நிலையில், ஜெய்ப்பூர் பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மோடி தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், ‘ராஜஸ்தானை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஹிண்டன், சிகார் மற்றும் பிகானீரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறேன்.