மதுரை : தமிழகத்தில் நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 4 பேர் பலியாயினர். மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பாதயாத்திரை சென்ற துறவிகள் பின் வந்த ஜீப் மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சுற்றுலா பேருந்து வேகமாக இடித்ததில் ஜீப், ஜெயின்மத துறவிகள் மீது மோதியது. இந்த விபத்தில் சாத்வி (45), பிரியதர்ஷிகா (52) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மஞ்சுளா (68), மிருதுரஞ்சனா(56). சமயதேமிஷா(35) ஆகிய 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.