புதுடெல்லி: பழங்குடியினரை சுடலாம் என மோடி அரசு சட்டம் இயற்றியதாக, மத்தியப் பிரதேசத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்தியப் பிரசேத மாநிலம் ஷாதோல் பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி அன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘பழங்குடியினருக்காக மோடி அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. அதில் பழங்குடியினரை சுடலாம் என்ற ஒரு வரி உள்ளது. அவர்கள் உங்கள் நிலத்தை பறிக்கிறார்கள், உங்கள் காடுகளை எடுத்துக் கொள்கிறார்கள், தண்ணீரை எடுக்கிறார்கள். பின்னர் உங்களை சுடலாம் என்கின்றனர்’’ என பேசினார்.