அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் 6 பள்ளிகள் எஸ்எஸ்எல்சி தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி: கமிஷனர் பாராட்டு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச் 2019ல் நடந்த அரசு பொது தேர்வில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 6 பள்ளிகள் 10ம் வகுப்பு அரசு பொது தேர்விலும், 2  பள்ளிகள் 12ம் வகுப்பு அரசு பொது தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சி  பெற்று சாதனை படைத்துள்ளன. 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 11 பள்ளிகளில் பயின்ற 1578 மாணவ, மாணவிகளில் 1527 மாணவ, மாணவிகள் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

மேலும், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 16 பள்ளிகளில் பயின்ற 1604 மாணவ, மாணவிகளில் 1538 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில்  பயின்று தேர் ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கும், இப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி பாராட்டு  தெரிவித்துள்ளார்.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: