ஏர்போர்ட்: திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறியதில் இருந்து விமான நிலைய விரிவாக்கம், பார்க்கிங் வசதிகள், புதிய முனையம் அமைக்கும் பணி என பல்வேறு வகையான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் விமான நிலையத்தின் மின்சார செலவினங்களை குறைக்கும் வகையில் ஒரு மெகா வாட் மின் உற்பத்தி செய்வதற்காக சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலைய தேவைக்காக இங்கிலாந்து நாட்டிலிருந்து புதிய தொழில்நுட்பம் கொண்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வாகனம் ரூ 4.10 கோடியில் வரவழைக்கப்பட்டுள்ளது.