மதுரை: தேனி ஆயுதப்படை காவலர் கணேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தேன். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் என்னை வீட்டு வேலைக்காரர் போல் நடத்தினார். இதுதொடர்பாக தேனி எஸ்பியிடம் புகார் அளித்தேன். அவரும் எனக்கு பல்வேறு தொல்லைகள் அளித்தார். இந்த சூழலில் என்னை ராமநாதபுரத்துக்கு இடமாறுதல் செய்து, 2018ல் தேனி எஸ்பி உத்தரவிட்டார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளித்தேன். டிஜிபியும் நடவடிக்கை எடுக்கவில்லை.என்னைப் போலவே ஆயுதப்படை காவலர் ரகுவுக்கும், அவர்கள் பல்வேறு தொல்லைகள் அளித்தனர். இதனால் இருவரும் டிஜிபி அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றோம். இதனால் எங்களை சஸ்பெண்ட் செய்து தேனி எஸ்பி 22.3.2018ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.