பிரதமர் மோடி பிறப்பில் உயர்சாதியைச் சேர்ந்தவர், ஆனால் ஆவணங்களில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் அராரியா மக்களவைத் தொகுதியில் கடந்த 20ம் தேதி நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கு சில மணி நேரம் முன்னதாக தேஜஸ்வி யாதவ் தன்னுடைய டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி இன்று பீகார் வருகிறார். அவர் தன்னை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக காட்டிக் கொள்வார். இதன் மூலம் மக்களின் கவனத்தை சிதறடித்து வாக்குகளை பிரிக்க முயற்சிப்பார்’ என குறிப்பிட்டிருந்தார்.