திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மெண்டோசா காலனியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வெங்கடேசன் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் ரூ.4 லட்சம் பணமும் திருட்டு போயுள்ளது. திருடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.