லண்டன்; பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதாகி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடியிடம் இன்று விசாரணை நடக்கிறது. இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13 ஆயிரம் கோடி கடன் பெற்றார். அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பியோடிய அவர், கடந்த மாதம் அங்கு கைது செய்யப்பட்டார். அங்குள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வாண்ட்ஒர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.